நாகை: கஜா புயலால் டெல்டாவில் 2.35 லட்சம் ஏக்கரில் நெற்பயிர்பாதிக்கப்பட்டது. 4 லட்சம் தென்னை மரங்கள் சாய்ந்தன. டெல்டாவில் கஜா புயலால் நாகை மாவட்டத்தில் 2 லட்சம் ஏக்கர் சம்பா தாளாடி சேதமானது. பணபயிரான மா, தென்னை, முந்திரி 5 லட்சம் மரங்கள் வேறோடு சாய்ந்தது. இதனை நம்பி இருந்த 10 ஆயிரம் பேர் வாழ்வாதாரத்தை இழந்துள்ளனர். தஞ்சாவூர் மாவட்டத்தில் 35 ஆயிரம் ஏக்கரில் சூழ் பிடிக்கும் பருவத்தில் இருந்த நெற்பயிர்கள் சேதமானது. 8000 ஆயிரம் மின்கம்பங்கள், 466 வீடுகள் முழுமையாக சேதமாகி உள்ளது. 116 வீடுகள் லேசாக சேதமாகி உள்ளது. 90 கால்நடைகள் இறந்துள்ளன. 36 துணைமின் நிலையங்கள் சேதமடைந்துள்ளன. திருவாரூர் மாவட்டத்தில் 1 லட்சம் தென்னை மரங்கள் சாய்ந்தது. 10 ஆயிரம் ஏக்கரில் வாழைகள் சேதமானது.