காரைக்கால்: நாகை மாவட்டம் வேதாரண்யம் மற்றும் சுற்றியுள்ள பகுதிகள் கஜா புயலால் சின்னாபின்னமாகி உள்ளது. கோடியக்கரையில் உள்ள வன விலங்கு சரணாலயத்தில் 2000க்கும் மேற்பட்ட மான்கள், பன்றிகள், குதிரைகள் இருந்தன. நேற்று பலத்த காற்றுடன் மழை பெய்ததால் 50க்கும் மேற்பட்ட மான்கள் ஆங்காங்கே இறந்து கிடந்தன. இந்நிலையில் நேற்று காரைக்கால் அருகே மேலவாஞ்சூரில் சரக்கு கப்பல் தரை தட்டி இருந்தது. அந்த இடத்தில் இன்று காலை 22 மான்கள், 7 பன்றிகள், 1 குதிரை ஆகிய விலங்குகளின் சடலங்கள் கரை ஒதுங்கின. அதேபோல் அருகே உள்ள கற்களாச்சேரி கடற்கரையில் 15 மான்கள், 20 பன்றிகள், 4 குதிரைகள் மற்றும் ஏராளமான பறவைகள் இறந்து கரை ஒதுங்கின.