புதுச்சேரி: கஜா புயல் காரணமாக முகத்துவாரத்தை ஆழப்படுத்தும் கப்பல் ஒன்று காரைக்கால் வாஞ்சூர் கடற்கரையில் நேற்று இரவு தரைதட்டியது. இது தனியார் துறைமுகத்தில் இருந்து 10 கடல் மையில் தொலைவில் விலகி தரைத் தட்டியுள்ளது. புதுச்சேரி மாநிலம் காரைக்காலில் உள்ள தனியார் நிறுவனத்திற்கு சொந்தமான தூர்வாரும் மெர்கேட்டர் என்ற கப்பல் புயல் காரணமாக நடுக்கடலில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. ஆனால் கஜா புயலால் காற்று 110கி.மீ வேகத்தில் வீசியதன் காரணமாக இந்த கப்பல் தரைதட்டியதாக கூறப்படுகிறது. மேலும் இந்த கப்பலில் 20க்கும் மேற்பட்ட அதிகாரிகள் இருப்பதாக தெரிய வந்துள்ளது.