கூட்டுறவு சங்கத்தில் கொள்ளை முயற்சி 4 கோடி நகை தப்பியது

கோபால்பட்டி: திண்டுக்கல் அருகே தோட்டனூத்து பஞ்சாயத்துக்கு உட்பட்ட நல்லமநாயக்கன்பட்டியில் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கம் உள்ளது. இங்கு இப்பகுதியை சேர்ந்தவர்களின் ரூ.4 கோடி நகைகள் அடமானம் வைக்கப்பட்டுள்ளன.இங்கு நேற்று முன்தினம் இரவு பூட்டை உடைத்து நுழைந்த கொள்ளையர்கள், நகைகள் வைக்கப்பட்டுள்ள லாக்கரை உடைக்க முடியாததால் வெளியேறினர். இதனால் லாக்கரில் உள்ள சுமார் ரூ.4 கோடி மதிப்பிலான நகைகள் தப்பியது என போலீசார் தெரிவித்தனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: