மும்பை: மும்பை புறப்பட வேண்டிய ஏர் இந்தியா விமானம் ரத்து செய்யப்பட்டதால் அதில் பயணம் செய்யவிருந்த 280க்கும் மேற்பட்ட மும்பை பயணிகள் பாங்காக் விமான நிலையத்தில் 12 மணி நேரத்துக்கும் மேல் சிக்கித் தவித்தனர். பயணிகளில் பலர் கடந்த திங்கட்கிழமை மும்பையில் தங்கள் குடும்ப நிகழ்ச்சிகளில் பங்கேற்கவிருந்தனர். ஆனால் மாற்று விமானம் மூலம் பாங்காக்கில் இருந்து திங்கட்கிழமை இரவு 8 மணிக்குதான் புறப்பட்டனர். மும்பைக்கு இரவு 11 மணிக்கு வந்து சேர்ந்தனர். ஏர் இந்தியா நிறுவனம் மீது வழக்கு தொடரப்போவதாக சில பயணிகள் கூறினர். எஸ்.மகாதேவேன் என்ற பயணி கூறும்போது, “ஞாயிற்றுக்கிழமை இரவு 8 மணிக்கு பாங்காக்கில் இருந்து அந்த விமானம் புறப்படவிருந்தது.