பாஜ விமர்சனம் கருணை அடிப்படையில் பிரதமர் ஆனவர் நேரு

ஜெய்ப்பூர்: ‘கருணை அடிப்படையில் தான் ஜவகர்லால் நேரு நாட்டின் முதல் பிரதமரானார்’ என்று பாஜ விமர்சித்துள்ளது. நாட்டின் முதல் பிரதமரான  மறைந்த ஜவகர்லால் நேருவின் 129வது பிறந்த நாள் நேற்று கொண்டாடப்பட்டது. இதை முன்னிட்டு பேட்டியளித்த  காங்கிரஸ் எம்பி சசிதரூர், “இன்று  டீ விற்பவர் நமக்கு பிரதமராக இருக்கிறார். நாட்டில் எந்த ஒரு இந்தியனும் மிக உயர்ந்த பதவிக்கு செல்வதற்கு விருப்பப்படலாம் என்ற நிலையை   நேரு உருவாக்கியதுதான் இதற்கு காரணம்” என்று கூறியிருந்தார். இந்த கருத்து க்கு பாஜ கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக பாஜ தேசிய செய்தி தொடர்பாளர் சுதன்சு திரிவேதி அளித்த பேட்டியில், ‘‘மக்களின் மிகப்பெரிய ஆதரவோடு நாட்டின் பிரதமரானாவர்  நரேந்திர மோடி மட்டும்தான். அதே நேரம், முன்னாள் பிரதமர் ஜவகர்லால் நேரு கருணை அடிப்படையில் நாட்டின் முதல் பிரதமராக ஆனவர்.  இந்திரா  காந்தி தனது ஆதரவாளர்கள் மூலமாக பிரதமரானார். வாஜ்பாயும், மோடியும் மட்டும்தான் பிரதமர் ஆவதற்கு முன்பாகவே மக்களால் ஏற்றுக்  கொள்ளப்பட்டனர். ’’ என்றார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: