தஞ்சை: மேட்டூர் அணையில் பாசனத்திற்கு நீர் திறந்து 5 மாதங்கள் ஆகியும் கடைமடைக்கு தண்ணீர் வராததை கண்டித்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களை போலீசார் வலுக்கட்டாயமாக கைது செய்யப்பட்டனர். தஞ்சை மாவட்டம் அதிராமபட்டினம், மல்லிபட்டினம், உள்ளிட்ட கடைமடை பகுதிகள் இன்னும் காய்ந்தே கிடக்கின்றன. மேட்டூர் அணையில் நீர் இந்த இடங்களுக்கு வந்து சேரும் படி மாவட்ட ஆட்சியர், பொதுப்பணித்துறை அதிகாரிகளிடம் விவசாயிகள் பலமுறை மனு அளித்துள்ளனர். ஆனால் எந்த நடவடிக்கையும் எடுக்காததால் அவர்கள் அதிராமபட்டினம் பேருந்து நிலையத்தில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.