மதுரையில் நள்ளிரவு பிறந்தநாள் கொண்டாட்டத்தில் ஈடுபட்ட ரவுடிகள் : சுற்றி வளைத்த காவல்துறை

மதுரை; கடந்த சில மாதங்களுக்கு முன்னர் சென்னையில் நடைபெற்றதை போலவே மதுரையிலும் 50-க்கும் மேற்பட்ட ரவுடிகள் இணைந்து பிறந்தநாள் கொண்டாட்டத்தில் பங்கேற்றிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மதுரையில் கடந்த ஒரு மாதத்தில் மட்டும்  சுமார் 14-க்கும் மேற்பட்ட கொலை சம்பவங்கள் நடந்த நிலையில் மேற்கண்ட சம்பவம் மக்களிடையே பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மதுரையைச் சேர்ந்த சோலை ரவி என்பவருக்கு பிறந்தநாளை முன்னிட்டு நேற்று மதுரை மாநகரம் எங்கும் இவருக்கு பிறந்தநாள் போஸ்டர்கள் ஒட்டப்பட்டிருந்தது.

இந்நிலையில் அப்பகுதியை சேர்ந்த 50-க்கும் மேற்பட்ட ரவுடிகள் ஒன்றிணைந்து அவரது பிறந்தநாளை நள்ளிரவில் கொண்டாடுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. ரகசிய தகவலையடுத்து 100-க்கும் மேற்பட்ட போலீசார் தனியார் விடுதியை சுற்றி வளைத்தபோது, அங்கிருந்த ரவுடிகள் நாலாபுறமும் சிதறி ஓடியுள்ளனர். அவர்களில் சுமார் 20 பேரை சுற்றி வளைத்து பிடித்த காவல்துறையினர், அவர்களிடம் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: