மதுரை; கடந்த சில மாதங்களுக்கு முன்னர் சென்னையில் நடைபெற்றதை போலவே மதுரையிலும் 50-க்கும் மேற்பட்ட ரவுடிகள் இணைந்து பிறந்தநாள் கொண்டாட்டத்தில் பங்கேற்றிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மதுரையில் கடந்த ஒரு மாதத்தில் மட்டும் சுமார் 14-க்கும் மேற்பட்ட கொலை சம்பவங்கள் நடந்த நிலையில் மேற்கண்ட சம்பவம் மக்களிடையே பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மதுரையைச் சேர்ந்த சோலை ரவி என்பவருக்கு பிறந்தநாளை முன்னிட்டு நேற்று மதுரை மாநகரம் எங்கும் இவருக்கு பிறந்தநாள் போஸ்டர்கள் ஒட்டப்பட்டிருந்தது.