திருவனந்தபுரம்: திருவனந்தபுரம் பத்மநாபசுவாமி கோயிலில் வருடம்தோறும் ஐப்பசி திருவிழா விமரிசையாக நடைபெறும். இவ்வருட ஐப்பசி திருவிழா கடந்த 7ம் தேதி கொடியேற்றத்துடன் ெதாடங்கியது. நேற்று இரவு பள்ளிவேட்டை நடந்தது. இன்று பிரசித்திப் பெற்ற ஆறாட்டு விழாவுடன் திருவிழா நிறைவடையும். இன்று மாலை கோயிலில் இருந்து திருவிதாங்கூர் மன்னர் குடும்பத்தை சேர்ந்த ராமவர்மா தலைமையில் ஆறாட்டு ஊர்வலம் நடக்கும்.