டெல்லி: ரிசர்வ் வங்கியின் ஆளுநர் உர்ஜித் பட்டேல் பிரதமர் மோடியை கடந்த 8-ம் தேதி அன்று சந்தித்து பேச்சு நடத்தியுள்ளார். பிரச்சனைகளை பேசி தீர்த்து கொள்வதற்காகவே இந்த சந்திப்பு நடைபெற்றதாக கூறப்படுகிறது. சிறுகுறு தொழில்களுக்கு கடன் உதவி வழங்க ரிசர்வ் வங்கி விரைவில் ஒரு தனி அமைப்பை ஏற்படுத்தும் என கூறப்படுகிறது. பாஜக அரசு தேர்தலை யூகம் வைத்து சில திட்டங்களை நிறைவேற்ற ரிசர்வ் வங்கியிடம் ஒத்துழைப்பை நாடி வருகிறது.