பெங்களூரு : பெங்களூருவில் தனியார் நிதி நிறுவனம் நடத்தி வந்தவர் பரீத். இவர் பொதுமக்களிடம் இரட்டிப்பு பணம் கொடுப்பதாக கூறி பல ஆயிரம் கோடி ரூபாய் ேமாசடி செய்ததாக குற்றச்சாட்டு கூறப்பட்டது. இந்த புகாரின் பேரில் அமலாக்கப் பிரிவு அதிகாரிகள் பரீத்திடம் விசாரணை நடத்தி வரும் நிலையில், இந்த குற்றச்சாட்டில் இருந்து காப்பாற்றுவதாக கூறி பரீத்திடம் கர்நாடகா முன்னாள் அமைச்சர் ஜனார்த்தன ரெட்டி ரூ.20.50 கோடி லஞ்சம் பெற்றதாக குற்றச்சாட்டு எழுந்தது.