மதுரை: பட்டாசு வெடிக்கும் நேரம் தொடர்பாக மக்களின் கருத்தை கேட்டு அரசு முடிவு செய்யு என முதலமைச்சர் பழனிசாமி கூறியுள்ளார். மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், தினகரனை அழைக்கவில்லை, அதிமுக நிர்வாகிகள் சிலர் பாதைமாறி சென்றார்கள், அவர்களை தான் அழைத்தோம் என கூறியுள்ளார். மேலும், அதிமுகவை சேர்ந்தவர்கள் யாருக்கும் பயமில்லை என அவர் கூறியுள்ளார்.