பெங்களூரு: பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் உள்ள இளவரசி, பரோல் கோரி சிறைத்துறை எஸ்பியிடம் விண்ணப்பம் செய்துள்ளார். தமிழகத்தில் இருந்து தடையில்லா (என்.ஓ.சி) சான்றிதழ் கிடைத்ததும் அவருக்கு பரோலுக்கான அனுமதி கிடைக்கும் என்று கூறப்படுகிறது.சொத்து குவிப்பு வழக்கில் கைதான அம்மா மக்கள் முன்னேற்றக் கழக பொதுச்செயலாளர் சசிகலா மற்றும் அவரது உறவினர் இளவரசி, சுதாகரன் ஆகியோர் பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் தண்டனை கைதிகளுக்கான அறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இவர்களில் சசிகலா மட்டும் ஒரு முறை கணவர் இறந்ததற்காக பரோலில் சென்று வந்துள்ளார். மீதமுள்ள 2 பேரும் இதுவரை பரோலில் செல்லவில்லை.