மதுரை: புதுக்கோட்டை மாவட்டத்தின் முக்கிய நீராதாரமான வெள்ளாற்றில் சட்ட விரோதமாக மணல் திருட்டு நடக்கிறது. அதிகாரிகள் கண்டுகொள்வதில்லை. எனவே, சட்டவிரோத மணல் திருட்டை தடுக்கவும், சம்பந்தப்பட்டவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கவும் கோரி சிலர், ஐகோர்ட் மதுரை கிளையில் மனு செய்திருந்தனர். இந்த மனுக்களை ஏற்கனவே விசாரித்த நீதிபதிகள், சட்டவிரோத மணல் திருட்டு அன்றாட நடவடிக்கையை போல மாறிவிட்டது. எனவே, மணல் திருட்டை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம். மணல் திருட்டில் ஈடுபட்டு பிடிபடும் வாகனங்களை வருவாய்த்துறையினர் விடுவிக்க கூடாது. மாட்டுவண்டி பிடிபட்டால் மாட்டை மட்டும் விடுவிக்கலாம். வண்டியை விடுவிக்க கூடாது என உத்தரவிட்டிருந்தனர்.