திருவில்லிபுத்தூர்: தொடர் மழை காரணமாக திருவில்லிபுத்தூர் அருகே வாழைக்குளம் கண்மாய் நிரம்பி வழிகிறது. இக்கண்மாயிலிருந்து தண்ணீர் திறக்கப்பட்டுள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். திருவில்லிபுத்தூர் பகுதி மற்றும் மேற்குத் தொடர்ச்சி மழைப்பகுதியில் பெய்த தொடர் மழை காரணமாக மேற்குத் தொடர்ச்சி மழை அடிவாரப்பகுதியில் அமைந்துள்ள மம்சாபுரம் வாழைக்குளம் கண்மாய் நிரம்பி வழிகிறது.