தாயுடன் இருந்த தொடர்பை பயன்படுத்தி சிறுமியை கர்ப்பமாக்கிய ஆட்டோ டிரைவர் கைது

திருவொற்றியூர்: தண்டையார்பேட்டையை சேர்ந்தவர் சாந்தி. கணவர் பிரிந்து சென்றதால், மகள் சுமதி (16), (பெயர்கள் மாற்றப்பட்டுள்ளன) என்பவருடன் வசித்து வருகிறார். சாந்திக்கும் அதே பகுதியை சேர்ந்த ஆட்டோ டிரைவர் மார்ட்டின் அலெக்ஸ் (எ) ஜோசப் (42) என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டது.

ஜோசப், அடிக்கடி சாந்தி வீட்டுக்கு வந்து சென்றுள்ளார். இருவரும் உல்லாசமாக இருந்துள்ளனர். இந்நிலையில், கடந்த ஆண்டு, சாந்தியின் மகள் சுமதிக்கு வயிற்று வலி ஏற்பட்டது. அவரை, தனியார் மருத்துவமனைக்கு அழைத்து சென்றபோது, சுமதி கர்ப்பமாக இருப்பது தெரிந்தது. விசாரணையில், மது போதையில் ஒருமுறை வீட்டுக்கு வந்த ஜோசப், தனிமையில் இருந்த சிறுமி சுமதியை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். மேலும், இதுபற்றி வெளியில் கூறினால் கொன்றுவிடுவதாக கூறி, பலமுறை பலாத்காரம் செய்துள்ளார், என்பது தெரியவந்தது.

இந்த விவகாரம் அக்கம் பக்கத்தினருக்கு தெரிந்தால் அவமானமாகிவிடும் என் நினைத்த சாந்தி, மணலியில் உள்ள தனது தாய் வீட்டில் சிறுமியை தங்க வைத்தார். கடந்த மே மாதம் 1ம் தேதி சிறுமிக்கு பிரசவ வலி ஏற்பட்டது. அவரை, ராயபுரத்தில் உள்ள ஆர்எஸ்ஆர்எம் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு பெண் குழந்தை பிறந்தது. அப்போது, சிறுமிக்கு எப்படி குழந்தை பிறந்தது. அவரது கணவர் எங்கே என டாக்டர்கள் கேட்டபோது, சரிவர பதிலளிக்காததால், சந்தேகமடைந்த டாக்டர்கள், எண்ணூர் அனைத்து மகளிர் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். இன்ஸ்பெக்டர் பிரேமா வழக்கு பதிந்து, ஜோசப்பை தேடி வந்தார். இந்நிலையில், தலைமறைவாக இருந்த ஜோசப்பை நேற்று போக்சோ சட்டத்தில் கைது செய்தனர். இவருக்கு திருமணமாகி 2 குழந்தைகள் இருப்பது குறிப்பிடத்தக்கது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: