அம்பாசமுத்திரம் அருகே மின்சாரம் தாக்கி ஒப்பந்த ஊழியர் பலி: 3 பேர் படுகாயம்

திருநெல்வேலி: நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் அருகே கடையம் பகுதியில் மின்சாரம் தாக்கி ஒப்பந்த ஊழியர் ஒருவர் உயிரிழந்துள்ளார். மேலும் 3 பேர் படுகாயமடைந்துள்ளனர். அரசு கேபிள் ஒயர் கொண்டு செல்ல இரும்புக்கம்பி நட்டபோது மின்கம்பியில் உரசியதில் மின்சாரம் தாக்கியது. மின்சாரம் தாக்கியதில் படுகாயமடைந்த பாலமுத்துகிருஷ்ணன் என்ற ஊழியர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். படுகாயமடைந்த சுகுமார், ராமர் ஆகியோர் தென்காசி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இச்சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: