சத்தியமங்கலம்: சத்தியமங்கலம் அடுத்துள்ள நாகரணை கிராமத்தை சேர்ந்த விவசாயி சண்முகம் என்பவரது மகள் ரம்யா (25). இடது கை விரல் குறைபாடு உள்ளவர். இவர், பள்ளியில் படித்தபோது கராத்தே கற்றார். பின்னர் 7ம் வகுப்பு படிக்கும் போது இவரது ஆர்வத்தை பார்த்த ஆசிரியர்கள் இவருக்கு பாரா விளையாட்டு போட்டியில் பங்கேற்கும் ஏற்பாடுகளை செய்தனர். குண்டு எறிதல், ஈட்டி எறிதல், தட்டு எறிதல், ஓட்டப்பந்தயம் என அனைத்து பிரிவுகளிலும் இவர் பங்கேற்று தேசிய மற்றும் மாநிலங்கள் அளவிலான போட்டிகளில் வெற்றி பெற்று சாதனை படைத்துள்ளார்.