புவனேஸ்வர்: வங்கக்கடலில் உருவாகிய காற்றழுத்த தாழ்வு மண்டலம், புயலாக மாறியது. புதிய புயலுக்கு இந்திய வானிலை மையம் டிட்லி என்று பெயர் சூட்டியுள்ளது. டிட்லி என பெயரிடப்பட்டுள்ள புயல் அடுத்த 24 மணி நேரத்தில் தீவிரமாக மாற வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் நேற்று தெரிவித்தது. ஒடிசா மற்றும் ஆந்திர மாநிலங்களுக்கு கனமழை எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. இதனையடுத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஒடிசாவில் உள்ள கஜபதி, கன்ஜம், புரி, ஜகத்சிங்பூர் ஆகிய 4 மாவட்டங்களிலுள்ள அனைத்து பள்ளிகள் மற்றும் கல்லூரிகளை இன்றும், நாளையும் மூட ஒடிசா அரசு உத்தரவிட்டுள்ளது.