தரங்கம்பாடி: தரங்கம்பாடி அருகே நவராத்திரி கொலு பொம்மை தயாரிக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. நாகை மாவட்டம் தரங்கம்பாடி அருகே அரும்பாக்கம் நல்லாடை ரோட்டில் உள்ள பொம்மை தயாரிக்கும் தொழிலகத்தில் நவராத்திரியையொட்டி பொம்மை தயாரிக்கும் பணியில் தொழிலாளர்கள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். ஜல்லிக்கட்டு, பிரதோஷசெட்டு, கும்பாபிஷேக செட்டு, சூரியரதம், லவகுஷாசெட்டு, கார்த்திகை பெண்கள், கோகிலா கண்ணன் செட்டு, கணையாழி செட்டு உள்ளிட்ட செட்டுகளாக பொம்மைகளும் நடராஜர், கிருஷ்ணன், ஆண்டாள், லெட்சுமி, சரஸ்வதி, முருகன், காமதேனு, பாபா, யசோதா கண்ணன், உள்ளிட்ட தனி பொம்மைகளும் தயாரிக்கப்பட்டு வருகின்றன.