19 ‘பப்’களில் ரெய்டு : 23 பேர் அதிரடி கைது

சென்னை: அனுமதிக்கப்பட்ட நேரத்தை விட கூடுதல் நேரம் திறந்து இருந்த 19 கேளிக்கை விடுதிகளில் போலீசார் நேற்று முன்தினம் இரவு அதிரடி சோதனை நடத்தி, பார் மேலாளர் உட்பட 23 பேரை கைது ெசய்தனர்.சென்னை மாநகர காவல் எல்லைக்குட்பட்ட பகுதியில் போலீசார் அனுமதியுடன் பல கேளிக்கை விடுதிகள் நடந்து வருகிறது. இந்த விடுதிகளை அதிகபட்சமாக இரவு 11 மணிவரை நடத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது.  ஆனால்  அனுமதிக்கப்பட்ட நேரத்தை விட கூடுதலாக விடிய விடிய பல இடங்களில் கேளிக்கை விடுதிகள் திறந்து இருப்பதாக போலீஸ் கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதனுக்கு தொடர் புகார்கள் வந்தது.

அவரது உத்தரவின்பேரில், அண்ணாசாலை, ஆயிரம் விளக்கு, எழும்பூர், நுங்கம்பாக்கம், தி.நகர், சேலையூர், தாம்பரம் உட்பட 19 இடங்களில் அந்தந்த பகுதியில் உள்ள இன்ஸ்பெக்டர்கள் தலைமையில் நேற்று முன்தினம் இரவு  அதிரடி சோதனை நடத்தப்பட்டது. இந்த அதிரடி சோதனையில் போலீசார் அனுமதிக்கப்பட்ட நேரத்தை விட கூடுதல் நேரம் கேளிக்கை விடுதி திறந்து இருந்தது தெரிந்தது. மேலும் கேளிக்ைக விடுதியில், உறுப்பினர்களாக  இல்லாதவர்கள் அதிகளவில் இருந்ததும் தெரியவந்தது. இதையடுத்து, 19 கேளிக்கை விடுதிகளில் இருந்த பார் மேலாளர்கள் உள்பட 23 பேரை போலீசார் அதிரடியாக கைது செய்தனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: