பேஸ்புக்கில் போலி கணக்கு... மார்பிங் படத்தை பதிவிட்டு மாணவிகளை மயக்கி பலாத்காரம் : வாலிபர் கைது

திருவனந்தபுரம்,: கேரளாவின் கொச்சியில் கும்பளம் பகுதியைச் சேர்ந்தவர் பயாஸ் முபீன்(19). ேவலை இல்லாமல் சுற்றித்திரிந்த இவர் பேஸ்புக்கில் போலியாக ஒரு கணக்கை தொடங்கி தனது முகத்தை மாற்றி மார்பிங் செய்து அதில் பதிவிட்டுள்ளார். புரபைலில், தான் மாடலாக பணிபுரிந்து வருவதாகவும், ஐந்து நட்சத்திர ஓட்டல்களில் இசை நிகழ்ச்சி நடத்தும் ‘டிஜே’ வாக பணிபுரிவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.இவரது மார்பிங் புகைப்படங்களை பார்த்து மயங்கிய பள்ளி, கல்லூரி மாணவிகள், இளம்பெண்கள் உள்பட ஏராளமானோர் நண்பர்களாயினர். பேஸ்புக்கில் இவருக்கு 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பெண் நண்பர்கள் உள்ளனர். இந்தநிலையில் கோழிக்கோட்டை சேர்ந்த ஒரு பள்ளி மாணவியை பயாஸ் முபீன் கடத்தி சென்று பலாத்காரம் செய்ததாக கோழிக்கோடு போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்குப்பதிவு செய்து பயாஸ்முபீனை கைது செய்தனர். விசாரணையில், இவர் பல பள்ளி, கல்லூரி மாணவிகள் மற்றும் இளம்பெண்களை பலாத்காரம் செய்தது தெரியவந்தது. அவர்களிடம் பண மோசடியும் செய்துள்ளார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: