சிவகாசியில் பதுக்கிய ரூ.1 கோடி பட்டாசுகள் பறிமுதல் : 2 பேர் கைது

சிவகாசி: சிவகாசி அருகே சிவகாமிபுரம் பகுதியில் நேற்று வருவாய்த்துறையினர் சோதனை மேற்கொண்டனர். அப்போது, விருதுநகரை சேர்ந்த ஜெயபாலுக்கு சொந்தமான 2 குடோன்களில் அனுமதியின்றி பட்டாசு பேக்கிங் செய்த 1,005 அட்டை பண்டல்கள் பதுக்கியிருந்தது தெரிய வந்தது. 2 குடோன்களுக்கும் சீல் வைத்த அதிகாரிகள், பட்டாசுகளை பறிமுதல் செய்தனர். புகாரின்படி சிவகாசி கிழக்கு போலீசார் வழக்குப்பதிந்து, ஜெயபாலை கைது செய்தனர். இதேபோல சிவகாசி, சாத்தூர் ரோட்டில் டிரான்ஸ்போர்ட் அலுவலகம் ஒன்றில் அனுமதியின்றி பதுக்கி வைத்திருந்த 1,151 பட்டாசு பண்டல்களையும் அதிகாரிகள் பறிமுதல் செய்து, அலுவலகத்திற்கு சீல் வைத்தனர். உரிமையாளர் சுந்தர் கைது செய்யப்பட்டார். பறிமுதல் செய்த பட்டாசுகளின் மொத்த மதிப்பு ரூ.1 கோடிக்கு மேல் இருக்கும் என கூறப்படுகிறது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: