சென்னை: தரமணியை சேர்ந்த சத்தியமூர்த்தி நேற்று மத்திய குற்றப்பிரிவு போலீசில் புகார் ஒன்றை அளித்தார். அவர் நிருபர்களிடம் கூறியதாவது: வீடு வாங்க ₹12 லட்சம் கடன் கோரி தனியார் வங்கியில் விண்ணப்பித்தேன். அப்போது ஏற்கனவே நான் 11 கடன்களை பல்வேறு வங்கியின் மூலம் கடன் பெற்றுள்ளதாக தனியார் வங்கி கூறி கடன் அளிக்க மறுத்து விட்டது. சிபில் ஸ்கோர் பயன்படுத்தி இந்த மோசடி நடந்துள்ளது. இதுகுறித்து போலீசார் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்றார்.