சென்னை: வேலைக்கிடைக்காத கோபத்தில் சென்ட்ரல் ரயில்நிலையத்தில் தொடர்ந்து திருட்டு சம்பவத்தில் ஈடுபட்ட வெளிமாநில வாலிபர்களை ரயில்வே போலீசார் கைது செய்தனர். சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் தொடர்ந்து திருட்டு சம்பவங்கள் நடைபெறுவதாக ரயில்வே போலீசாருக்கு புகார்கள் வந்தது. இதையடுத்து ரயில்வே இன்ஸ்பெக்டர் தாமஸ் ஏசுதாஸ் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு போலீசார் குற்றவாளிகளை தேடிவந்தனர்.இந்நிலையில் சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இறங்கியபோது தன்னுடைய செல்போன் திருடுபோனதாக விழுப்புரம் மாவட்டம், செஞ்சியை சேர்ந்த பெருமாள் என்பவர் ரயில்வே காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அவர் அளித்த புகாரின் அடிப்படையில் ரயில்வே போலீசார் வழக்கு பதிவு செய்து சென்ட்ரல் ரயில் நிலையத்தில் உள்ள சிசிடிவி கேமராவில் உள்ள வீடியோ பதிவுகளை வைத்து ஆய்வு செய்தனர்.