திருச்சி: திருச்சி கோ ஆப்டெக்ஸ் பொதிகை விற்பனை நிலையத்தில் தீபாவளி சிறப்பு விற்பனையை கலெக்டர் ராசாமணி இன்று காலை குத்துவிளக்கேற்றி முதல் விற்பனையை துவக்கி வைத்தார். கோ.ஆப்டெக்சில் திருச்சி மாவட்ட விற்பனை நிலையங்களில் கடந்த ஆண்டு ரூ.287.68 லட்சம் விற்பனை செய்யப்பட்டது. தீபாவளி 2018க்கான விற்பனை இலக்கு ரூ.368 லட்சம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. திருச்சி பொதிகை விற்பனை நிலையத்தில் தீபாவளி 2017ல் ரூ.193.38 லட்சம் விற்பனை செய்யப்பட்டது. தீபாவளி 2018க்கு ரூ.250 லட்சம் விற்பனை செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.