மழைக்கால கூட்டத்தொடரில் மத்திய அரசு மீது மீண்டும் நம்பிக்கையில்லா தீர்மானம்: சந்திரபாபு நாயுடு முடிவால் பாஜ அதிர்ச்சி

ஐதராபாத்: நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரில் மத்திய அரசுக்கு எதிராக மீண்டும் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வர தெலுங்கு தேசம் முடிவு செய்துள்ளதால் பாஜ அதிர்ச்சி அடைந்துள்ளது.ஆந்திர மாநிலத்திற்கு சிறப்பு அந்தஸ்து கேட்டு, மத்திய அமைச்சரவையில் இருந்தும், பாஜ கூட்டணியில் இருந்தும் தெலுங்கு தேசம் கட்சி விலகியது. மேலும் மத்திய அரசுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வந்தது.

தொடர் அமளியில் கடந்த நாடாளு மன்ற கூட்ட த் தொடரில் விவாதத்திற்கு எடுத்துக்கொள்ள முடியவில்லை.

எனவே, ஜூலை 18ல் தொடங்க உள்ள மழைக்கால கூட்டத்தொடரில் மீண்டும் மத்திய அரசுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானத்தை கொண்டு வர சந்திரபாபு நாயுடு முடிவு செய்துள்ளார். தெலுங்குதேசம் கட்சி சார்பில் இதற்கான மனு மக்களவை சபாநாயகர் சுமித்ரா மகாஜனிடம் வழங்கப்பட உள்ளது.  சந்திரபாபு நாயுடுவின் இந்த முடிவால் பாஜ அதிர்ச்சி அடைந்துள்ளது.

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

Related Stories: