மும்பை: மும்பையில் தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாக நேற்றும் ரயில் சேவைகள் முடங்கியது. நாளை வரை பலத்த மழை தொடரும் என்று வானிலை ஆராய்ச்சி இலாகா அறிவித்துள்ளது. மும்பையில் தொடர்ச்சியாக நான்காவது நாளாக நேற்றும் கனமழை கொட்டித் தீர்த்தது. மேற்கு ரயில்வே புறநகர் பிரிவில் தண்டவாளங்கள் நீரில் மூழ்கியதால் வசாய் மற்றும் விரார் இடையே புறநகர் ரயில் சேவைகள் ரத்து செய்யப்பட்டது. வதோதரா எக்ஸ்பிரஸ் ரயில் நாலாசாபோரா-விரார் ரயில் நிலையங்களுக்கு இடையே சிக்கிக் கொண்டது. இதையடுத்து ரயில் பயணிகளுக்கு தேவையான உதவிகளை செய்து கொடுக்க தேசிய பேரிடர் மீட்பு படையினர் மற்றும் ரயில்வே பாதுகாப்பு படையினர் அங்கு விரைந்தனர்.