ஆம்பூர்: விருதுநகரை சேர்ந்தவர் நர்மதா நந்தகுமார்(45). இவர் தற்போது சென்னை அண்ணா நகரில் வசித்து வருகிறார். நீர்நிலைகள் பாதுகாப்பு மற்றும் மணல் திருட்டை தடுத்து நிறுத்தக்கோரி பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு வருகிறார்.வேலூர் மாவட்டம், ஆம்பூர் அடுத்த தேவலாபுரம் பாலாற்றுக்கு நேற்று நர்மதா வந்தார். அங்கு மணல் கடத்தலை தடுக்கும் வகையில் பள்ளங்களை திடீரென தோண்டி போராட்டத்தில் ஈடுபட்டார்.இதுகுறித்து அவர் கூறியதாவது:
கடந்த 3 ஆண்டுகளாக நீர் நிலைகளை பாதுகாத்தல், தூர் வாருதல் மற்றும் மணல் கொள்ளையை தடுக்க வேண்டும் என்பதற்காக தனி நபராக போராடி வருகிறேன்.