டெல்லியில் பிரதமர் இல்லம் நோக்கி ஆம் ஆத்மி கட்சியினர் பேரணி

புதுடெல்லி: டெல்லியில் பிரதமர் இல்லம் நோக்கி ஆம் ஆத்மி கட்சியினர் ஏராளமானோர் பேரணியில் ஈடுபட்டுள்ளனர். பணி புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ள அரசு அதிகாரிகளுக்கு துணைநிலை ஆளுநர் உத்தரவு பிறப்பிக்க கோரிக்கை விடுத்துள்ளனர். ஆளுநர் மாளிகையில் கெஜ்ரிவால், அமைச்சர்கள் 7-வது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டுள்ள நிலையில் பேரணி நடத்தி வருகின்றனர். அவருடன் 3 டெல்லி அமைச்சர்களும் உள்ளனர். இந்த விவகாரத்தில் பிரதமர் தலையிட வேண்டும் என சில அரசியல் கட்சி தலைவர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

இதற்கிடையில், இவ்விவகாரத்தில் பிரதமரின் கவனத்தை ஈர்க்கும் வகையில் அவரது இல்லம் நோக்கி இன்று பேரணியாக புறப்பட்டு செல்வோம் என ஆம் ஆத்மி தேசிய பொதுச் செயலாளர் பங்கஜ் குப்தா நேற்று அழைப்பு விடுத்திருந்தார். இந்நிலையில், தலைநக்ர் டெல்லியில் இன்று மாலை ஆம் ஆத்மி அமைச்சர்கள், பிரமுகர்கள், தொண்டர்கள் என அனைவரும் ஒன்று திரண்டனர். அவர்கள் அனைவரும் பிரதமர் மோடி வீட்டுக்கு பிரமாண்ட பேரணியாக சென்றனர். இதுதொடர்பாக போலீசார் கூறுகையில், ஆம் ஆத்மி பேரணிக்கு அனுமதி அளிக்கவில்லை. பேரணியில் அசம்பாவிதங்கள் ஏற்படாமல் தடுக்க நடவடிக்கை எடுத்து வருகிறோம் என தெரிவித்தனர்.

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம்

Related Stories: