ஷிவ்மோகா: கர்நாடகா மாநிலம் ஷிவ்மோகா பகுதியை சேர்ந்த பெண் ஒருவர் தனது குழந்தைக்கு பாஸ்போர்ட் வழங்கும்படி வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜுக்கு ட்வீட் செய்த 2 நாட்களில் அந்த குழந்தைக்கு வழங்கப்பட்டது. கர்நாடக மாநிலம் ஷிவ்மோகாவைச் சேர்ந்த அக்ஷதா என்பவர் ஜெர்மனியில் வசித்து வருகிறார். இவருக்கு அண்மையில் இந்தியாவில் குழந்தை பிறந்தது. குழந்தையுடன் ஜெர்மனி செல்வதற்காக அக்ஷதா பாஸ்போர்ட் கேட்டு விண்ணப்பித்தார்.