பொன்னமராவதி: பொன்னமராவதியில் உள்ள பொன்.புதுப்பட்டி உடையப்பிராட்டி அம்மன் கோயிலில் மாம்பழத் தேரோட்டம் நேற்று வெகு விமரிசையாக நடந்தது. புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி அடுத்த பொன்.புதுப்பட்டி உடையப்பிராட்டி அம்மன் கோயில் வைகாசி திருவிழாவை முன்னிட்டு கடந்த 15ம் தேதி சுவாமிக்கு காப்பு கட்டப்பட்டது. அதைத்தொடர்ந்து தினமும் மண்டகப்படிதாரர்களால் நடைபெற்று வழிபாடுகள் நடைபெற்றன. நேற்று (23ம் தேதி) மாலை மாம்பழத் தேரோட்டம் நடந்தது. தேரோட் டத்தை முன்னாள் பேரூராட்சித் தலைவர் ராஜா அம்பலகாரர் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.