சென்னை: பிரதமர் நரேந்திர மோடியின் சென்னை வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று காலை முதல் பல்வேறு இடங்களில் போராட்டம் நடந்து வருகிறது. திமுக, காங்கிரஸ், விசிக, உள்ளிட்ட கட்சிகளை சேர்ந்த 500க்கும் மேற்பட்ட தொண்டர்கள் சென்னை மீனம்பாக்கம் விமான நிலையம் முன் ஒன்று கூடி போராட்டம் நடத்தினர். அவர்கள் மத்திய அரசுக்கும், மோடியின் சென்னை வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தினர். கருப்பு சட்டை அணிந்து கொண்டு, கருப்பு கொடிகளை ஏந்தி, கருப்பு பலூன்களை பறக்கவிட்டு பழவந்தாங்கல் சாலையில் இருந்து, மத்திய அரசுக்கு எதிராக முழக்கம் எழுப்பிக்கொண்டு வந்தனர். இதனால் அப்பகுதி பரபரப்பாக காணப்பட்டது.