அரசியல் சதிகளை முறியடித்து சட்டப் போராட்டத்தால் சிறை மீண்ட செந்தில் பாலாஜிக்கு வாழ்த்துகள்: ஜவாஹிருல்லா

சென்னை: அரசியல் சதிகளை முறியடித்து சட்டப் போராட்டத்தால் சிறை மீண்ட செந்தில் பாலாஜிக்கு வாழ்த்துகள் என மனிதநேய மக்கள் கட்சி தலைவர் ஜவாஹிருல்லா தெரிவித்துள்ளார். மேலும் “15 மாத காலம் சட்டப் போராட்டம் நடத்திய செந்தில் பாலாஜியின் தியாகம் போற்றத்தக்கது. விசாரணை தொடங்காமலேயே 471 நாள் சிறையில் அடைத்தது பாஜக அரசின் பழிவாங்கும் நடவடிக்கை என்பதில் மாற்றுக் கருத்தில்லை. அதிகாரத்துக்கு அஞ்சாமல் தலை வணங்காமல் தொடர்ந்து சட்டப் போராட்டம் நடத்திப் பிணை பெற்றிருக்கிறார். உடல் நலத்தில் சற்று குன்றி இருந்தாலும் மன தைரியத்தில் விஞ்சி நின்று அதிகாரத்தை அதிர வைத்திருக்கிறார்” எனவும் ஜவாஹிருல்லா தெரிவித்துள்ளார்

The post அரசியல் சதிகளை முறியடித்து சட்டப் போராட்டத்தால் சிறை மீண்ட செந்தில் பாலாஜிக்கு வாழ்த்துகள்: ஜவாஹிருல்லா appeared first on Dinakaran.

Related Stories: