சென்னை: தமிழக காங்கிரஸ் முன்னாள் தலைவர் ஈ.வி.கே.சம்பத்தின் 97வது பிறந்த நாளையொட்டி, சென்னை சத்தியமூர்த்தி பவனில் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த அவரது திருவுருவப் படத்திற்கு காங்கிரஸ் முன்னாள் தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் தலைமையில் நேற்று மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது. இந்நிகழ்ச்சியில் மாநில துணைத்தலைவர்கள் பொன் கிருஷ்ணமூர்த்தி, முருகானந்தம், அசன் மவுலானா எம்எல்ஏ, மாவட்ட தலைவர்கள் சிவ ராஜசேகரன், டில்லி பாபு, மாநில பொதுச்செயலாளர் ரங்கபாஷ்யம், மகிளா காங்கிரஸ் மாநில தலைவர் சுதா ராமகிருஷ்ணன், ஆர்.டி.ஐ.பிரிவு மாநில துணை தலைவர் மயிலை தரணி உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் அளித்த ேபட்டி: மு.கஸ்டாலின் முதல்வராக பொறுப்பேற்ற பிறகு ஒருநாள் கூட ஓய்வில்லாமல் உழைத்து வருகிறார். தற்போது இந்த அரசியல் நடவடிக்கை மூலம் மு.க.ஸ்டாலின் செயல் இமாலய அளவுக்கு உயர்ந்து இருக்கிறது….
The post கூட்டணி தர்மத்தை காப்பாற்றுவதில் முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னணியில் இருக்கிறார்: ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் பேட்டி appeared first on Dinakaran.
