உலக யானை தினம்: தீபாராதனை, மலர்மாலை அணிவித்து அழகர் கோவில் யானைக்கு மரியாதை

மதுரை: அருள்மிகு கள்ளழகர் திருக்கோயில் அழகர் கோவில் இன்று உலக யானை தினத்தை முன்னிட்டு திருக்கோயிலில் உள்ள 16 வயதுடைய சுந்தரவல்லி தாயார் யானை காலை குளியல் தொட்டியில் நீராடி, கைகளை கழுவி குடிநீர் அருந்தி பின்னர் அலங்காரமாகியது. யானைக்கு மரியாதை செலுத்தும் விதமாக தீபாராதனை மலர்மாலை அணிவித்தல் மற்றும் வாழைப்பழம் தர்பூசணி பேரிச்சம்பழம் ஆப்பிள் பல வகைகள் அளிக்கப்பட்டது. நிகழ்வில் திருக்கோயில் துணை ஆணையர் செயல் அலுவலர் தி.அனிதா அவர்கள் மற்றும் கண்காணிப்பாளர் பிரதீபா அவர்கள் பேஷ்கார் கருப்பையா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்….

The post உலக யானை தினம்: தீபாராதனை, மலர்மாலை அணிவித்து அழகர் கோவில் யானைக்கு மரியாதை appeared first on Dinakaran.

Related Stories: