மயானபூமி ஆக்கிரமிப்பு

திருவள்ளூர்: திருவள்ளூர் நகராட்சி லட்சுமிபுரம் பகுதியில் உள்ள மயான பூமி ஆக்கிரமிப்பால் மிகவும் சுருங்கி வருகிறது. இந்த ஆக்கிரமிப்பை தடுத்து நிறுத்த வேண்டுமென அப்பகுதி மக்கள் சார்பில், நகராட்சி ஆணையரிடம் கொடுத்த மனுவின் விவரம் :திருவள்ளூர் நகராட்சியில் லட்சுமிபுரம் பகுதி மக்களுக்கென, ஜெ.என்.சாலையில் எல்.ஐ.சி., பின்புறம் மயானபூமி உள்ளது. சிலர் மயானபூமியை ஆக்கிரமிப்பு செய்து வருகின்றனர். இதனால் வரும்காலத்தில் சடலங்களை அடக்கம் செய்வதில் சிக்கல் ஏற்படும் நிலை உள்ளது. ஆக்கிரமிப்புகளை அகற்றி, சுற்றுச்சுவர் அமைக்கவேண்டும். இவ்வாறு கூறப்பட்டுள்ளது….

The post மயானபூமி ஆக்கிரமிப்பு appeared first on Dinakaran.

Related Stories: