2 பேருக்கு குண்டாஸ் பாய்ந்தது

காஞ்சிபுரம்:  காஞ்சிபுரம் அருகே திருப்புட்குழியை சேர்ந்தவர் சட்டநாதன். இவருக்கும், இவரது உறவினர்கள் அதே பகுதியை சேர்ந்த  அன்பு (எ) குணசீலன் (26) ,சங்கர் (47) ஆகியோருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு முன் விரோதம் இருந்தது. இதையொட்டி கடந்த சில மாதங்களுக்கு முன், சட்டநாதன், கொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து அன்பு (எ) குணசீலன், சங்கர், ஆகியோரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.கைது செய்யப்பட்ட 2 பேர் மீது, ஏற்கனவே பல வழக்குகள் உள்ளதாக கூறப்படுகிறது. இதையடுத்து, தொடர்ந்து குற்ற சம்பவங்களில் ஈடுபட்ட 2 பேரையும், குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க, எஸ்பி சுதாகர், கலெக்டருக்கு பரிந்துரை செய்தார். அதன்பேரில் கலெக்டர் ஆர்த்தி, 2 பேரையும் குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்க உத்தரவிட்டார். …

The post 2 பேருக்கு குண்டாஸ் பாய்ந்தது appeared first on Dinakaran.

Related Stories: