மீண்டும் தமிழ் சினிமாவி்ல் பிசியாகி வருகிறார் லட்சுமி மேனன். புலிகுத்தி பாண்டி படத்திற்கு பிறகு அவர் நடித்துள்ள படம் ஏஜிபி. இந்த படம் வரும் பொங்கலுக்கு திரைக்கு வர உள்ளது. இதில் லட்சுமி மேனன் மல்டிபிள் பெர்சனாலிட்டியாக நடித்திருக்கிறார் இதுகுறித்துபடத்தின் இயக்குனர் ரமேஷ் சுப்பிரமணியன் கூறியதாவது: ஒரே மனிதருக்குள் மூன்று கதாபாத்திரங்கள் உள்நுழைந்து அந்த மனிதரை ஆட்டிவைக்கும் வித்தியாசமான ஆக்ஷன் திரில்லர் தான் இந்தப் படம்.இப்படி மூன்று பாத்திரங்கள் உள்நுழைந்து பாதிப்புக்குள்ளாகும் கதாபாத்திரத்தில் லட்சுமி மேனன் நடித்திருக்கிறார். இந்த படம் அவரது கேரியரில் முக்கியமான படமாக இருக்கும். என்றார்.