புதுடெல்லி: நடிகை ஸ்வரா பாஸ்கர் நடித்த பழைய படத்தின் காட்சிகளை மையப்படுத்தி ஆபாச பதிவுகளை வெளியிட்ட நபர் மீது டெல்லி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். தலைநகர் டெல்லியில் உள்ள வசந்த் குஞ்ச் காவல் நிலையத்தில் பாலிவுட் நடிகை ஸ்வரா பாஸ்கர் பரபரப்பு புகார் ஒன்றை அளித்துள்ளார். அதில், ‘நான் நடித்த பழைய திரைப்படம் ஒன்றின் காட்சி குறித்து, ஆட்சேபகரமான ஆபாச கருத்துகளை டுவிட்டரில் பதிவிட்டு வருகின்றனர். இது, என்னுடைய தனிப்பட்ட வாழ்க்கையை பாதிக்கிறது. ெபாதுவெளியில் என்னுடைய நன்மதிப்பை கெடுக்கிறது. எனவே, சம்பந்தப்பட்ட நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்று தெரிவித்துள்ளார். அதையடுத்து வசந்த் குஞ்ச் போலீசார், தகவல் தொழில்நுட்ப சட்டத்தின் பிரிவுகளின் கீழ் எப்.ஐ.ஆர் பதிவு செய்து விசாரணையை தொடங்கியுள்ளனர்.