அஞ்சலியின் மாற்றம்

சென்னை, ஐதராபாத் என மாறி மாறி பறந்து வருகிறார் அஞ்சலி. ஒரே நேரத்தில் தமிழிலும் தெலுங்கிலும் நடிப்பதால் அவர் ஓரிடத்தில் அதிக நாட்கள் தங்குவதில்லை. பவன் கல்யாணுடன் நடித்துள்ள வக்கீல் சாப் படத்தை முடித்துவிட்டார். தெலுங்கில் மற்றொரு படமாக ஆனந்த பைரவி படத்தில் நடித்துள்ளார். இதில் மற்றொரு ஹீரோயினாக ராய் லட்சுமி நடித்திருக்கிறார். தமிழில் யோகி பாபுவுடன் சேர்ந்து பூச்சாண்டி படத்தில் நடித்து வருகிறார். இதில் பேய் வேடத்தில் அஞ்சலி நடிப்பதாக கூறப்படுகிறது. 

சமீபத்தில் பைக் ஓட்ட கற்றுக்கொண்டு, ஐதராபாத் சாலைகளில் பைக் ஓட்டிச் சென்று வந்தார் அஞ்சலி. இப்போது மார்ஷல் ஆர்ட்ஸ் கற்பதில் தனது கவனத்தை அவர் திருப்பியுள்ளார். ‘இது பெண்களுக்கு அவசியமான தற்காப்புக் கலை. சினிமாவில் நடிப்பதால் இந்த கலையை கற்று இருப்பதால் ஆக்‌ஷன் வேடங்களில் நடிப்பதும் சுலபமாக இருக்கும். அதே நேரம், வீட்டில் சும்மா இருப்பதை விட இதுபோல் கலைகள் கற்றுக்கொள்வது நேரத்தை சரியாக செலவிட உதவியாக இருக்கிறது’ என்கிறார் அஞ்சலி.

Related Stories: