போதை பொருள் வழக்கு விசாரணைக்குள்ளான நடிகை தீபிகா படுகோனின் மேலாளர் கரிஷ்மா பிரகாஷ் தலைமறைவாகியுள்ளார். நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் ஜூன் மாதம் 14ம் தேதி தூக்கிட்டு இறந்தார். சுஷாந்த் சிங்குடன் தொடர்புள்ள சிலர் போதை பொருள் வாங்கி விற்றிருப்பது தெரிய வந்தது. இது தொடர்பாக தேசிய போதை பொருள் தடுப்புத் துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகிறார்கள். அவர்கள் சுஷாந்த் சிங்கின் காதலியான நடிகை ரியா சக்ரபோர்த்தி, அவருடைய சகோதரர், சுஷாந்த் சிங்கின் மேனேஜர், உள்பட பலரிடம் விசாரணை நடத்தினர். இதில் ரியாவும் அவரது சகோதரரும் கைது செய்யப்பட்டனர். பின்னர் ரியா ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்.