பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத், தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். இது தொடர்பாக சிபிஐ விசாரித்து வருகிறது. இதற்கிடையே சுஷாந்தின் காதலியும் நடிகையுமான ரியா சக்ரபோர்த்தி, போதை பொருள்களை வாங்கியதும் அவற்றை சுஷாந்துக்கு கொடுத்து வந்ததும் விசாரணையில் தெரிந்தது. தேசிய போதைப் பொருள் தடுப்புப் பிரிவு அதிகாரிகள் ரியாவிடம் 3 நாட்களாக விசாரணை நடத்திய பிறகு அவரை கைது செய்தனர். நடிகை ரியாவிடம் போலீசார் நடத்திய விசாரணையில் அவர் 20 பக்க வாக்குமூலம் கொடுத்துள்ளதாகவும் அதில் போதைப்பொருள் விவகாரத்தில் பாலிவுட்டின் முன்னணி நடிகர், நடிகைகள், இயக்குனர்கள், தயாரிப்பாளர்கள், பாடகர்கள், துணை நடிகர்கள் என 25 பேரின் பெயர்களை அம்பலப்படுத்தி உள்ளதாகவும் பாலிவுட்டில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.