தனுஷ் நடித்த மரியான் படத்தை இயக்கியவர் பரத்பாலா. ஏ.ஆர்.ரகுமானின் வந்தே மாதரம் ஆல்பம் உள்ளிட்ட பல ஆல்பங்களையும் இயக்கி உள்ளார். தற்போது கொரோனா கால ஊரடங்கை மீண்டும் எழுவோம் என்ற தலைப்பில் ஆவண படமாக இயக்கி உள்ளார். கடந்த 2 மாதத்திற்கு மேலாக இந்தியா முழுவதும் நடந்த ஊரடங்கை 117 பேர் கொண்ட 15 குழுக்கள் இந்தியா முழுக்க பயணித்து ஊரடங்கு காட்சிகளை படமாக்கி உள்ளனர். இந்த காட்சிகள் 4 நிமிட ஆவணப் படமாக தொகுக்கப்பட்டுள்ளது. ‘இதுவரை பார்த்திராத தேசிய ஊரடங்கை நாங்கள் படம் பிடித்துள்ளோம். கண்டிப்பாக வரும் தலைமுறையினர் கண்ணுக்கு தெரியாத ஒரு நோய் தொற்றால் இந்தியா எப்படி முழுமையாக ஸ்தம்பித்தது என்பதை தெரிந்து கொள்ள முடியும்’ என்கிறார் பரத்பாலா.