கவுதம் மேனன் இயக்கத்தில் யோகான் அத்தியாயம் ஒன்று படத்தில் விஜய் நடிப்பதாக இருந்தது. கவுதம் மேனனுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக விஜய் அப்படத்திலிருந்து விலகினார். அதன்பிறகு அவர்கள் இருவரும் இணையவில்லை. இந்நிலையில் யோகான் அத்தியாயம் ஒன்று கதையை ரஜினியிடம் கூறி கவுதம் மேனன் ஓகே வாங்கியிருப்பதாக தகவல் வெளியானது. இதுகுறித்து கவுதம் மேனன் கூறும்போது,’கபாலி படத்திற்கு முன்னதாக ரஜினியிடம் நான் கதை கூறியிருக்கிறேன்.