ரஜினியிடம் கூறியது என்ன கதை? கவுதம் மேனன் பதில்

கவுதம் மேனன் இயக்கத்தில் யோகான் அத்தியாயம் ஒன்று படத்தில் விஜய் நடிப்பதாக இருந்தது. கவுதம் மேனனுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக விஜய் அப்படத்திலிருந்து விலகினார். அதன்பிறகு அவர்கள் இருவரும் இணையவில்லை. இந்நிலையில் யோகான் அத்தியாயம் ஒன்று கதையை ரஜினியிடம் கூறி கவுதம் மேனன் ஓகே வாங்கியிருப்பதாக தகவல் வெளியானது. இதுகுறித்து கவுதம் மேனன் கூறும்போது,’கபாலி படத்திற்கு முன்னதாக ரஜினியிடம் நான் கதை கூறியிருக்கிறேன்.

அதன்பிறகு அவரிடம் எந்த கதையும் கூறவில்லை. ஆனால் ரஜினிக்காக ஒரு கதை எழுதி வைத்துள்ளேன். சந்தர்ப்பம் கிடைத்தால் அவரிடம் கூறுவேன். சமீபத்தில் அவரிடம் நான் கதை கூறியதாக வரும் தகவல் வதந்திதான். நடிகர் சூர்யாவிற்காக ஒரு கதை எழுதி வருகிறேன். அதை அவரிடம் சொல்வேன். அவருக்கு பிடித்திருந்தால் அப்படத்தை அவரை வைத்து இயக்குவேன்’ என்றார்.

Related Stories: