பயத்துடன் வாழும் நயன்தாரா

நடிகை நயன்தாரா முன்னணி நடிகைகளில் ஒருவராகவும் அதிக சம்பளம் வாங்கும் நடிகையாகவும் இருக்கிறார். ஆனாலும் பயத்துடனேயே வாழ்வதாக அவர் தெரிவித்துள்ளார். எதற்காக அப்படி சொன்னார் கேட்போமா... ‘முன்னணி ஹீரோயினாக இருந்தபோதும் வெற்றியை என் தலைக்கு நான் ஏற்றுவதில்லை. உண்மையை சொல்லவேண்டுமென்றால் சரியான படத்தை கொடுக்க மாட்டேனோ என்ற பயத்திலேயே வாழ்கிறேன்.

நான் பத்திரிகையாளர்களை தவிர்ப்பதாக கூறுகிறார்கள். அதற்கு காரணம் இருக்கிறது. என்னைப் பற்றி தவறான தகவல்கள் வெளியிட்டு என்னை தவறாக சித்தரித்து அப்படியே மற்றவர்களாலும் நான் புரிந்து கொள்ளப்பட்டிருக்கிறேன். அதனால்தான் நான் சந்திப்பதில்லை’ என்றார். நயன்தாரா திடீரென்று இப்படி பேசியதற்கு காரணம் இருக்கிறது. பொதுவாக அவர் அட்டை படம் எதற்கும் போஸ் தருவதில்லை.

ஆனால் ஆங்கில இதழ் ஒன்றுக்கு மாடர்ன் உடையில் போஸ் தந்திருக்கிறார். வழக்கமாக இது வட நாட்டு மாடலிங் துறை அல்லது வட நாட்டு ஸ்டார்களை மட்டுமே பிரசுரிக்கும் இதழ். அந்த பாலிசியை உடைத்து தென்னிந்திய நடிகைக்கு முக்கியத்துவம் கொடுத்து நயன்தாராவை இதழின் அட்டை படத்தில் பிரசுரித்துள்ளது. அப்போது நயன்தாரா அளித்த பேட்டியில்தான் மேற்கண்டபடி தெரிவித்திருக்கிறார்.

Related Stories: