ஜீவா நடிப்பில் ராஜு முருகன் இயக்கியுள்ள படம் ஜிப்சி. இந்த படத்தின் ஷூட்டிங் முடிந்துவிட்டாலும் திரைக்கு வருவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதற்கு காரணம் சென்சார் போர்டு. படத்தை தணிக்கை செய்ய சென்சாருக்கு அனுப்பி வைத்தனர். படம் பார்த்த சென்சார் அதிகாரிகள் சான்றிதழ் வழங்க மறுத்துவிட்டனர். படத்தில் உ.பி.முதல்வர் யோகி ஆதித்யநாத் போன்ற கேரக்டரில் ஒருவர் நடித்திருப்பதாகவும் அந்த கேரக்டரை கடுமையாக படத்தில் விமர்சித்து இருப்பதாகவும் கூறப்படுகிறது.