திருவல்லிக்கேணியில் உள்ள லாட்ஜில் அழகிகளை வைத்து பாலியல் தொழில்: 2 புரோக்கர்கள் கைது

சென்னை: திருவல்லிக்கேணியில் உள்ள லாட்ஜில் அழகிகளை வைத்து பாலியல் தொழில் நடத்திய புரோக்கர்கள் 2 பேரை போலீசார் கைது செய்து, அவர்களிடம் இருந்து 9 ெபண்களை மீட்டனர். சென்னை நகருக்கு வேலை தேடி வரும் அப்பாவி இளம்பெண்களிடம் சினிமா மற்றும் தொலைக்காட்சி தொடர்களில் நடிக்க வாய்ப்பு வாங்கித் தருவதாகவும், தனியார் நிறுவனங்களில் நல்ல சம்பளத்தில் வேலை வாங்கித் தருவதாகவும், ஆசை வார்த்தை கூறி, அடுக்குமாடி குடியிருப்புகள், பங்களா வீடுகள் மற்றும் தனியார் விடுதிகளுக்கு அழைத்துச் சென்று தங்க வைத்து, அவர்களை கட்டாயப்படுத்தி பாலியல் தொழிலில் ஈடுபடுத்தி வருவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.அதன்படி பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றத்தடுப்பு பிரிவு இன்ஸ்பெக்டர் லட்சுமி தலைமையிலான போலீசார் நேற்று முன்தினம் திருவல்லிக்கேணி, எல்லீஸ் ரோடு, குப்பு முத்து தெருவில் உள்ள தங்கும் விடுதியை கண்காணித்த போது, அங்கு பாலியல் தொழில் நடத்தி வந்தது உறுதி செய்யப்பட்டது. அந்த விடுதியில் பாலியல் தொழில் நடத்திய புரோக்கர்கள் பூந்தமல்லி, கன்டோண்மென்ட் பகுதியை சேர்ந்த பிரகாஷ் (எ) ரவி, (52), மாதவரம், கே.பி.கார்டன் பகுதியை சேர்ந்த ஏசு (எ) சுதன் (31) ஆகிய இருவரை கைது செய்தனர். அங்கு பாலியல் தொழிலில் ஈடுபடுத்தப்பட்ட வெளி மாநிலத்தைச் சேர்ந்த 9 பெண்கள் மீட்கப்பட்டனர். அவர்களிடமிருந்து 4 செல்போன்கள் மற்றும் 1 ஸ்வைப்பிங் இயந்திரம் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் தப்பியோடிய மற்றொரு நபரை போலீசார் தேடிவருகின்றனர். விசாரணைக்கு பின்னர் கைது செய்யப்பட்ட இருவரும் நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டு நீதிமன்ற உத்தரவுப்படி சிறையில் அடைக்கப்பட்டனர். மீட்கப்பட்ட 9 பெண்கள் காப்பகத்தில் ஒப்படைக்கப்பட்டனர். …

The post திருவல்லிக்கேணியில் உள்ள லாட்ஜில் அழகிகளை வைத்து பாலியல் தொழில்: 2 புரோக்கர்கள் கைது appeared first on Dinakaran.

Related Stories: