மலையாள சினிமாவில் ஹீரோக்கள் டைரக்டராகும் டிரெண்ட் உருவாகியிருக்கிறது. மோகன்லால் நடிப்பில் லூசிபர் படத்தை பிருத்விராஜ் இயக்கினார். இந்த படத்துக்கு ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்தது. பிருத்விராஜின் இயக்கத்துக்கும் பாராட்டுகள் குவிந்தது. இந்நிலையில் மோகன்லாலுக்கும் டைரக்ஷன் ஆசை வந்திருக்கிறது. தனது இயக்கத்தில் உருவாகும் புதிய பட அறிவிப்பை அவர் வெளியிட்டுள்ளார். வாஸ்கோடகாமா இந்தியாவுக்கு வந்து வணிகத்தில் ஈடுபட்டபோது, ஏராளமான சொத்துகளை பணம், நகையாக சேர்த்தான்.