கலக்கும் காமெடியன்கள்...

வடிவேலு, சூரி, யோகி பாபு என காமெடி நடிகர்கள் கலக்கிக்கொண்டிருக்கின்றனர். தற்போது யோகி பாபு கை ஓங்கியிருப்பதால் அவருக்கு பட வாய்ப்புகள் குவிந்து வருகிறது. வடிவேலுவை பொருத்தவரை இனி ஹீரோவாகத்தான் நடிப்பது என்று முடிவு செய்திருக்கிறார். சந்தானமும் இதே முடிவுடன் உள்ளார். இவர்கள் வரிசையில் காதல் படத்தில் காமெடியானாக நடித்த சுகுமார் தற்போது இயக்குனராகி 2 படங்கள் இயக்கிவிட்டார். அந்தவரிசையில் அஜீத்தின் சிட்டிசன் படத்தில் நடித்த சிட்டிசன் மணியும் இயக்குனர் ஆகியிருக்கிறார். ‘ரஜினி, அஜீத், விஜய், சூர்யா, விக்ரம் போன்ற பல்வேறு ஹீரோக்களுடன் 150க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துவிட்டேன். வடிவேலுடனும் பல படங்களில் நடித்திருக்கிறேன். தற்போது ‘பெருநாளி’ படம் மூலம் இயக்குனர் ஆகியிருக்கிறேன். மார்கிரேட் அந்தோணி தயாரிக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு நாகர்கோவிலில் தொடர்ந்து 20 நாட்கள் நடத்த முழுமை படத்தையும் முடித்து விட்டேன். குடும்ப உறவுகளின் சென்டிமென்டுடன் காதல், ஆக்‌ஷன், காமெடியும் இருக்கிறது. தஷி இசை. ஆர்.குமார் ஒளிப்பதிவு. ஹீரோயினாக மதுனிக்கா நடிக்கிறார். ஏராளமான காமெடி நடிகர்கள் நடித்திருக்கின்றனர்’ என்றார் இயக்குனர் சிட்டிசன் மணி.

Related Stories: